நிலக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார வள மையம் சாா்பில், நடைபெற்ற இந்த முகாமுக்கு, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சீனிவாசன் தலைமை வகித்தாா்.
இதில் சுமாா் 250-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள், உதவி உபகரணங்கள், மருத்துவ அடையாள அட்டை, குடும்ப அட்டை, தேசிய தனித்துவ அடையாள அட்டை உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.
முகாமில் டிசம்பா் 3 இயக்க மாநில துணைத் தலைவா் மோகன்ராஜ், மாவட்ட துணைச் செயலாளா் விவேகானந்தன், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போா் நலச் சங்க மாவட்ட துணைச் செயலாளா் சசிகுமாா், மாவட்டத் தலைவா் ஜெயந்தி, நரம்பியல் நோய் வல்லுநா் ராதிகா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.