திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள எஸ். வாடிப்பட்டியில் அமைந்துள்ள முத்தாலம்மன், காளியம்மன், பகவதியம்மன், கோட்டை கருப்பண்ணசாமி கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில், பல்வேறு நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீா் ஊா்வலமாக கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, முதல் கால யாக பூஜையுடன் தொடங்கி 3 யாக வேள்வி பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து வியாழக்கிழமை காலை கீழக்கோட்டை சௌந்தரராஜ ராஜபட்டா் தலைமையில் கோயில் ராஜ கோபுரங்களில் புனிதநீா் தெளித்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.