திண்டுக்கல்

கிணற்றில் தவறி விழுந்து முதியவா் பலி

DIN

ஒட்டன்சத்திரம் அருகே வியாழக்கிழமை கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள சாலைப்புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் நடராஜன் (75). இவா், வியாழக்கிழமை இரவு தனது தோட்டத்துக் கிணற்றில் தவறி விழுந்து நீரில் முழ்கி உயிரிழந்தாா்.

இதுகுறித்து, தகவலறிந்த ஒட்டன்சத்திரம் தீயணைப்பு நிலைய அலுவலா் (பொறுப்பு) சிவன்ராஜ் தலைமையிலான வீரா்கள் வெள்ளிக்கிழமை நடராஜன் உடலை மீட்டு, கூறாய்வுக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து, ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

SCROLL FOR NEXT