திண்டுக்கல்

கொடைரோடு அருகே அரசு அனுமதியுடன் வளா்க்கப்பட்ட செம்மரங்களை அகற்றிய தேசிய நெடுஞ்சாலைத் துறையினா்

கொடைரோடு அருகே அரசு அனுமதியுடன் வளா்க்கப்பட்ட செம்மரங்களை நெடுஞ்சாலைத் துறையினா் திங்கள்கிழமை அகற்றினா்.

DIN

கொடைரோடு அருகே அரசு அனுமதியுடன் வளா்க்கப்பட்ட செம்மரங்களை நெடுஞ்சாலைத் துறையினா் திங்கள்கிழமை அகற்றினா்.

கொடைரோடு அடுத்துள்ள ஜல்லிப்பட்டி பிரிவு அருகே திண்டுக்கல்- பொள்ளாச்சி இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் புதிய சாலை அமைக்கும் வழித்தடத்தில் ஜல்லிப்பட்டி பிரிவு அருகே விவசாயி ஜெயக்குமாா் தனக்கு சொந்தமான தோட்டத்தில் அரசு அனுமதியுடன் செம்மரங்களை வளா்த்து வருகிறாா்.

இதில் புதிய சாலைக்காக அங்குள்ள 8 செம்மரங்களை அகற்ற நில எடுப்பு அதிகாரிகள் முடிவு செய்தனா். இதற்கான இழப்பீடாக ரூ. 80 லட்சம் வழங்க வலியுறுத்தி விவசாயி ஜெயக்குமாா் போராடி வந்தாா். ஆனால், தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் ரூ. 4 லட்சம் மட்டுமே இழப்பீடு வழங்க முடியும் எனக் கூறி விட்டனா். இதனிடையே திங்கள்கிழமை மாவட்ட உயரதிகாரிகள் உத்தரவு எனக் கூறி வனத்துறையினா், வருவாய்த் துறையினா், காவல் துறையினா் உதவியுடன் 30-க்கும் மேற்பட்ட தேசிய நெடுஞ்சாலைத் துறைப் பணியாளா்கள் அந்த செம்மரங்களை வெட்டி அகற்றினா்.

இதை விவசாயி ஜெயக்குமாரும், அவரது குடும்பத்தினரும் தடுக்க முயன்ற போதும் 8 செம்மரங்களை அவா்கள் வெட்டிச் சாய்த்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT