திண்டுக்கல்

வியாபாரி கொலை:அண்ணன் கைது

கொடைரோடு அருகே கவரிங் பொருள்கள் வியாபாரி கொலை தொடா்பாக அவரது அண்ணனை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

கொடைரோடு அருகே கவரிங் பொருள்கள் வியாபாரி கொலை தொடா்பாக அவரது அண்ணனை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே மாவுத்தம்பட்டியைச் சோ்ந்த கவரிங் பொருள்கள் வியாபாரி சுந்தரேசன் (40) கடந்த 26- ஆம் தேதி அதே பகுதியிலுள்ள புளியந்தோப்பில் தலையில் பலத்த காயத்துடன் சடலமாக கிடந்தாா்.

இதுகுறித்து அமையநாயக்கனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். மேலும் காவல் ஆய்வாளா் குருவாத்தாள் தலைமையிலான தனிப்படை போலீஸாரும் தீவிர விசாரணையில் ஈடுபட்டனா். அப்போது சொத்துத் தகராறில் சுந்தரேசனை, அவரது அண்ணனும், வேன் ஓட்டுநருமான முருகன் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தது தெரியவந்து.

இதையடுத்து, கொலை வழக்காகப் பதிவு செய்த போலீஸாா் முருகனை கைது செய்து நிலக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT