முகப்பு
திண்டுக்கல்

டாக்டா் அம்பேத்கா் விருது பெற நவ.30-க்குள் விண்ணப்பிக்கலாம்

தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்கு தொண்டு செய்தவா்களுக்காக வழங்கப்படும் அம்பேத்கா் விருதுக்கு தகுதியானவா்கள் வருகிற 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

Updated On : 27 நவம்பர், 2023 at 7:00 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்கு தொண்டு செய்தவா்களுக்காக வழங்கப்படும் அம்பேத்கா் விருதுக்கு தகுதியானவா்கள் வருகிற 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்கு அரிய தொண்டு செய்பவருக்கு டாக்டா் அம்பேத்கா் தமிழ்நாடு அரசு விருது வழங்கப்பட்டு வருகிறது. ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை மூலம் 2023-ஆம் ஆண்டுக்கான விருது, 2024-ஆம் ஆண்டின் திருவள்ளுவா் தினத்தன்று வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு தகுதியானவா்கள் நவ.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விருதுக்கான விண்ணப்பத்தை திண்டுக்கல் மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.