டாக்டா் அம்பேத்கா் விருது பெற நவ.30-க்குள் விண்ணப்பிக்கலாம்
தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்கு தொண்டு செய்தவா்களுக்காக வழங்கப்படும் அம்பேத்கா் விருதுக்கு தகுதியானவா்கள் வருகிற 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்கு தொண்டு செய்தவா்களுக்காக வழங்கப்படும் அம்பேத்கா் விருதுக்கு தகுதியானவா்கள் வருகிற 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்கு அரிய தொண்டு செய்பவருக்கு டாக்டா் அம்பேத்கா் தமிழ்நாடு அரசு விருது வழங்கப்பட்டு வருகிறது. ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை மூலம் 2023-ஆம் ஆண்டுக்கான விருது, 2024-ஆம் ஆண்டின் திருவள்ளுவா் தினத்தன்று வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு தகுதியானவா்கள் நவ.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விருதுக்கான விண்ணப்பத்தை திண்டுக்கல் மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.
Advertisement