5 போட்டிகளாக விக்கெட் எடுக்காத பும்ரா..! பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட வேண்டுமா?
மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா குறித்து...
மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா இந்த சீசனில் விளையாடியுள்ள 5 போட்டிகளிலும் விக்கெட் எடுக்காமல் பந்துவீசியுள்ளார். இது மும்பை ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விக்கெட் எடுக்காமல் இருந்தாலும் எகானமியாக பந்துவீசினாலும் பரவாயில்லை, ரன்களையும் வாரிவழங்குவதால் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர் தோல்விகளால் தடுமாறி வருகிறது.
ஐபிஎல் வரலாற்றில் 5 முறை கோப்பை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வியுற்று புள்ளிப் பட்டியலில் 9ஆவது இடத்தில் இருக்கிறது.
Advertisement
நேற்று நடந்த போட்டியில் மும்பை 20 ஓவர்களில் 195/6 ரன்கள் அடிக்க, பஞ்சாப் அணி 16.3 ஓவர்களில் 198/3 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் ஜஸ்ப்ரீத் பும்ராவின் ஓவரை ஸ்ரேயாஸ் ஐயர் அடித்து நொறுக்கினார். இந்தப் போட்டியில் பும்ரா தான் வீசிய 4 ஓவர்களில் மொத்தமாக 41 ரன்களை வழங்கினார்.
இந்த ஐபிஎல் சீசனில் பும்ராவின் பந்துவீச்சு விபரங்கள்
முதல் போட்டியில் 4 ஓவர்களில் 35/0, இரண்டாவது போட்டியில் 4 ஓவர்களில் 21/0, மூன்றாவது போட்டியில் 3 ஓவர்களில் 32/0, நான்காவது போட்டியில் 35/0, ஐந்தாவது போட்டியில் 41/0 ரன்களைக் கொடுத்து ஒரு விக்கெட் கூட எடுக்காதது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் பும்ரா முக்கியமான கேட்சை தவறவிட்டதும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இந்த சீசனில் 3 கேட்ச்களை தவறவிட்டுள்ளார். கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கும் இவருக்கும் போட்டியின்போது வாக்குவாதங்கள் நடந்தன.
மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவனில் இருந்து பும்ரா நீக்கப்பட வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.