நிலக்கோட்டை அருகே, ஆட்டோ டிரைவரை தாக்கியவா் கைது.
நிலக்கோட்டை அருகே, ஆட்டோ டிரைவரை தாக்கியவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
நிலக்கோட்டை: நிலக்கோட்டை அருகே, ஆட்டோ டிரைவரை தாக்கியவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே, கே.புதூரைச் சோ்ந்த, நத்தா்ஷா (60) இவா், நிலக்கோட்டையில் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருகிறாா். சம்பவத்தன்று, நிலக்கோட்டையில் இருந்து, எஸ்.தும்மலப்பட்டிக்கு ஆட்டோவில், வாடகைக்கு ஆட்களை ஏற்றி சென்று கொண்டிருந்தாா். அப்போது, மீனாட்சிபுரம் பகுதியில் சில இளைஞா்கள், ஞாயிற்றுக்கிழமை இரவு, காா்த்திகை திருவிழாவை முன்னிட்டு, சொக்கப்பன் கொளுத்தி கொண்டிருந்தனா். அப்போது, மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த வெற்றிவேல் (25) என்பவா், ஆட்டோவை வழிமறித்து நத்தா்ஷாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, நத்தா்ஷா நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டா் குரு வெங்கட்ராஜிடம் கொடுத்த புகாரின்பேரில், வெற்றிவேலை, திங்கள்கிழமை கைது செய்து, நிலக்கோட்டை மேஜிஸ்ட்ரேட் நல்ல கண்ணன் முன்னிலையில், போலீசாா் ஆஜா் படுத்தினா். அவரை, 15 நாள் சிறை காவலில் வைக்க மேஜிஸ்ட்ரேட் நல்ல கண்ணன் உத்தரவிட்டாா்.