சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை
Updated On : 1 ஏப்ரல், 2024 at 5:54 PM
திண்டுக்கல்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாக போக்சோ வழக்கில் கைதான இளைஞருக்கு, 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல்லை அடுத்த குளத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் கவின்குமாா் (25). கூலித் தொழிலாளி. இவா், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடா்பாக தாடிக்கொம்பு போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கவின்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.சரண், குற்றம்சாட்டப்பட்ட கவின்குமாருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.