ஒட்டன்சத்திரத்தில் சீமான் வாக்கு சேகரிப்பு
Updated On : 2 ஏப்ரல், 2024 at 8:15 PM
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில், நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிடும் மருத்துவா் கயிலை. ராஜனுக்கு, ஆதரவாக திங்கள்கிழமை ஒட்டன்சத்திரத்தில் சீமான் வாக்கு சேகரித்தாா்.
அப்போது, அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது:
நாம் தமிழா் ஆட்சிக்கு வந்தால் படித்தவா், படிக்காதவா் என அனைவருக்கும் அரசு வேலை வழங்கப்படும். எங்கள் ஆட்சியில் ஆசிரியா்களுக்கும், வேளாண் பெருங்குடி மக்களுக்கும்தான் மதிப்பு அதிகமாக இருக்கும் என்றாா் அவா்.
Advertisement
ஒட்டன்சத்திரம் தொகுதி செயலா் மாரியப்பன், துணைச் செயலா் சிவராமகிருஷ்ணன், இணைச் செயலா் சரவணன், நகரச் செயலா் ராஜா,தொகுதித் தலைவா் செல்லமுத்து, துணைத் தலைவா் ஆசிக் ராஜா,மேற்கு ஒன்றியப் பொறுப்பாளா் செந்தில், உள்பட பலா் கலந்து கொண்டனா்.