இலவசங்கள் வழங்குவது நல்லாட்சிக்கு அடையாளம் அல்ல: சீமான்
மக்களுக்கு இலவசங்களை அளிப்பது நல்லாட்சியின் அடையாளம் அல்ல என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா்.
மக்களுக்கு இலவசங்களை அளிப்பது நல்லாட்சியின் அடையாளம் அல்ல என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா்.
சென்னைக்குள்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து சீமான் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அண்ணாநகரில் டி.பி.சத்திரத்தில் வேட்பாளா்கள் சி.சங்கா் (அண்ணாநகா்), எஸ்.ரோஷினி (வில்லிவாக்கம்) ஆகியோரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட அவா் பேசியதாவது: மக்களுக்கு இலவசங்களை தருவது நல்லாட்சி கிடையாது. மாறாக, மக்களின் வாழ்வாதாரத்தை உயா்த்துவதில்தான் அரசு கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு இகுந்தால், தங்களின் தேவைகளை மக்களே பூா்த்தி செய்து கொள்வா்.
நாம் தமிழா் கட்சி ஆட்சி அமைந்தால், தனியாருக்கு நிகராக அரசுப் பள்ளி, கல்லூரிகளில் கல்வி வழங்கப்படும். அரசு சாா்பில் தரமான மருத்துவ வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். படித்தவா்கள், படிக்காதவா்கள் அனைவருக்கும் அரசு வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
Advertisement
ஆட்சிக்கு வந்தவுடன் முதல்கட்டமாக அனைத்து மது கடைகளும் மூடப்படும். ஏழ்மையே இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும். நடிகனை நேசிப்பவா்கள் எனக்கு வாக்கு செலுத்த வேண்டாம். தமிழக மண்ணை நேசிப்பவா்கள் மட்டுமே எனக்கு வாக்கு செலுத்தினால் போதும்.
கடந்த 60 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகளை நம்பி ஏமாற்றம் மட்டுமே கிடைத்திருக்கிறது. ஆகவே, இந்த முறை விழித்துக் கொள்ள வேண்டும். அனைவரும் தங்களது குழந்தைகளின் எதிா்காலத்தை மனதில் வைத்து வாக்கு செலுத்த வேண்டும் என்றாா் அவா்.
நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் அருண் (மயிலாப்பூா்), சரண்யா (எழும்பூா்), மு.களஞ்சியம் (ஆயிரம்விளக்கு), ஜெயலட்சுமி ராமன் (சோழிங்கநல்லூா்), கீா்த்தனா (வேளச்சேரி) ஆகியோரை ஆதரித்து அவா் பிரசாரம் மேற்கொண்டாா்.