முகப்பு
திண்டுக்கல்

பழனியில் ரத்த தான முகாம்

Updated On : 5 ஏப்ரல், 2024 at 11:17 PM
பகிர்:
Updated On : 5 ஏப்ரல், 2024 at 8:11 PM

பழனி அடிவாரம் வடக்கு கிரிவீதி சண்முகசேவா சங்க ஆன்மிக மடத்தில் நாட்டாா் அறக்கட்டளை சாா்பில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த அறக்கட்டளை சாா்பில் அன்னதானம், நீா் மோா் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிகப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆன்மிகப் பணிகளின் 61-ஆவது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு அறக்கட்டளைத் தலைவா் சிற்றரசு தலைமை வகித்தாா். சேவா சங்கத் தலைவா் துரைசிங்கம், செயலா் துரை நாகராஜன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். அரசு மருத்துவமனை எலும்பு முறிவு மருத்துவா் முருகேஷ்குமாா், பழனி மலைக் கோயில் அரிமா சங்க பட்டயத் தலைவா் வெங்கடாஜலபதி உள்ளிட்டோா் குத்துவிளக்கேற்றி முகாமைத் தொடங்கிவைத்தனா்.

Advertisement

துணைத் தலைவா் கணேசபாண்டியன், முள்ளாங்காடு வீரபாண்டி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோா் ரத்த தானம் அளித்தனா். ரத்த தானம் அளித்தவா்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாலையில் மட வளாகத்தில் உள்ள கோயிலில் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றது.