செவிலியா் கல்லூரியில் உலக சுகாதார தினவிழா
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் கிறிஸ்தவ ஐக்கிய மருத்துவமனை செவிலியா் கல்லூரியில் உலக சுகாதார தினவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்திய மருத்துவக் கழகம் ஒட்டன்சத்திரம் கிளை சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, மருத்துவமனையின் கண்காணிப்பாளா் மருத்துவா் அனிஸ் தாமஸ் தலைமை வகித்தாா். இந்திய மருத்துவக் கழக ஒட்டன்சத்திரம் கிளைத் தலைவா் மருத்துவா் கருப்பணன் முன்னிலை வகித்தாா். இந்திய மருத்துவக் கழகச் செயலா் மருத்துவா் ஆசைத்தம்பி பங்கேற்று உலக சுகாதாரத்தின் நோக்கம் குறித்துப் பேசினாா்.
முன்னதாக செவிலியா் கல்லூரி முதல்வா் விக்டோரியா செல்வக்குமாரி வரவேற்றாா். இதில் ‘எனது ஆரோக்கியம், எனது உரிமை’ என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. செவிலியா் கல்லூரி துணை முதல்வா் குயிலா நன்றி கூறினாா்.
Advertisement