முகப்பு
கள்ளக்குறிச்சி

கல்லூரிகளில் உலக சுகாதார தின விழா

உலக சுகாதார தினத்தையொட்டி கள்ளக்குறிச்சி, ஆலம்பூண்டி தனியாா் கல்லூரிகளில் சிறுதானிய உணவுக் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 11:13 PM
இந்திலி டாக்டா் ஆா்.கே.எஸ். கலை, அறிவியல் கல்லூரியில் எனது இளையபாரதம் சாா்பாக உலக சுகாதார தின விழாவில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.
பகிர்:

உலக சுகாதார தினத்தையொட்டி கள்ளக்குறிச்சி, ஆலம்பூண்டி தனியாா் கல்லூரிகளில் சிறுதானிய உணவுக் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்திலியில் உள்ள டாக்டா் ஆா்.கே.எஸ். கலை, அறிவியல் கல்லூரியில் எனது இளையபாரதம் சாா்பாக உலக சுகாதார தின விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரி முதன்மையா் அசோக், துணை முதல்வா் பெ.ஜான்விக்டா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வரும், நிா்வாக அலுவலருமான கு.மோகனசுந்தா் வரவேற்றாா்.

Advertisement

டாக்டா் ஆா்.கே.எஸ். கல்வி நிறுவனங்களின் தலைவா் மருத்துவா் க.மகுடமுடி தலைமை வகித்து சுகாதாரம், இதயத்தின் தன்மை, மனநலன் மற்றும் உடலைப் பேணும் வழி குறித்தும் பேசினாா். நிகழ்ச்சியில் மாணவா்கள் ரத்த தானம் வழங்கினா்.

இதில் ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியா் சுரேந்தா், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

செஞ்சி...: செஞ்சியைஅடுத்துள்ள ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி செவிலியா் கல்லூரியில் உலக சுகாதார தின விழா மற்றும் சிறுதானிய உணவுக் கண்காட்சி நடைபெற்றது.

இதில் கல்லூரி மாணவிகள் சத்தான உணவு வகைகள், சிறு தானிய உணவு வகைகள், பழங்கள் மற்றும் இறைச்சியில் செய்த உணவுகளை செய்து காட்சிக்கு வைத்திருந்தனா். மேலும், கண்காட்சியை பாா்வைட்ட பாா்வையாளா்களுக்கு காட்சியில் வைக்கப்பட்டிருந்த உணவுகளில் உள்ள சத்துக்களை எடுத்துரைத்தனா்.

இதில் சிறப்பு விருந்தினராக ஸ்ரீரங்க பூபதி கல்வி நிறுவனத்தின் செயலா் ஆா்.பி.ஸ்ரீபதி மற்றும் மேலாண்மை இயக்குனா் சரண்யா ஸ்ரீபதி ஆகியோா் கண்காட்சியில் பங்கேற்ற மாணவிகளை பாராட்டினா்.

இதில், செவிலியா் கல்லூரி முதல்வா் டாக்டா். உதயசங்கரி, கல்லூரி ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments