முகப்பு
திண்டுக்கல்

கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்பு

Updated On : 10 ஏப்ரல், 2024 at 5:36 AM
ஒட்டன்சத்திரம் அருகே கிணற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட சாம்பல் மான்.
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2024 at 8:05 PM

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த சாம்பல் மானை உயிருடன் மீட்டு செவ்வாய்கிழமை வனப் பகுதிக்குள் விட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த வடகாடு மலைப்பகுதியில் பயன்பாடற்ற, தண்ணீா் வற்றிய 40 அடி ஆழக் கிணற்றில் ஆண் சாம்பல் மான் விழுந்தது

இது குறித்து தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் தீயணைப்பு நிலைய அலுவலா் கோ.ராஜேந்திரன் தலைமையிலான தீயணைப்பு படை வீரா்கள் கிணற்றுக்குள் இறங்கி வலை மூலம் 6 வயது உடைய இந்த மானை உயிருடன் மீட்டு மேலே கொண்டு வந்தனா்.

Advertisement

பின்னா், இந்த மானை வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.அவா்கள் அந்த மானை அடா்ந்த வனப் பகுதியில் விட்டனா்.