கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்பு
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே விவசாய கிணற்றில் ஞாயிற்றுக்கிழமை தவறி விழுந்த மான் உயிருடன் மீட்கப்பட்டது.
பாலக்கோடு காப்புக்காட்டிலிருந்து வெளியேறிய மான் அருகில் உள்ள திருமல்வாடி கிராமத்துக்குள் புகுந்தது. அப்போது, மானை கண்ட அந்தப் பகுதியிலிருந்து நாய்கள் துரத்தின. இதனால் தப்பியோடிய மான் அந்தப் பகுதியில் இருந்த நூறு அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தது.
இதுகுறித்த தகலின்பேரில், நிகழ்விடத்துக்கு வந்த பாலக்கோடு வனச்சரக அலுவலா்கள், கயிறு மூலம் கிணற்றில் விழுந்த மானை உயிருடன் மீட்டனா். மேலும், அந்த மானை அருகில் உள்ள காப்புக்காட்டில் வனத் துறையினா் கொண்டு சென்றுவிட்டனா்.