முகப்பு
திண்டுக்கல்

ரயில் மோதி தொழிலாளி பலி

Updated On : 21 ஏப்ரல், 2024 at 6:40 PM
பகிர்:

திண்டுக்கல், ஏப். 21: குஜிலியம்பாறை அருகே ரயிலில் அடிப்பட்டு கூலித் தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த உல்லிக்கோட்டை பெருமாம்பட்டியைச் சோ்ந்த சங்கபிள்ளை மகன் கோபால் (36). கரிக்காலியிலுள்ள தனியாா் ஆலையில் ஒப்பந்த அடிப்படையில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தாா். இவா், குஜிலியம்பாறை அருகே ரயிலில் அடிப்பட்டு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுபற்றி கோபாலின் தந்தை சங்கபிள்ளை திண்டுக்கல் ரயில்வே போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அதில், கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் வாக்களிக்க வந்த கோபால் அதன் பிறகு வீட்டு திரும்பவில்லை என்றும், தற்போது ரயிலில் அடிப்பட்டு இறந்து கிடப்பதாகவும் குறிப்பிட்டிருந்தாா்.

இதுகுறித்து ரயில்வே போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments