முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை

கொடைக்கானலில் புதன்கிழமை மாலை முதல் இரவு வரை பலத்த காற்றுடன் மழை பெய்தது.

Updated On : 1 ஆகஸ்ட், 2024 at 12:06 AM
கொடைக்கானல் ஏரிச் சாலைப் பகுதியில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்ட மின் வாரியத் துறையினா்.
பகிர்:

கொடைக்கானலில் புதன்கிழமை மாலை முதல் இரவு வரை பலத்த காற்றுடன் மழை பெய்தது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் புதன்கிழமை காலை முதல் மேகமூட்டமும் பலத்த காற்றும் வீசியது. மாலை முதல் இரவு வரை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், கொடைக்கானல் ஏரிச் சாலைப் பகுதி, லாஸ்காட்சாலை, அப்சா்வேட்டரி ஆகிய பகுதிகளில் மரக் கிளைகள் முறிந்து விழந்தன. இவற்றையும், மின் கம்பங்களுக்கு நடுவே செல்லும் ஆபத்தான மரக் கிளைகளையும் அகற்றும் பணியில் மின் வாரியத் துறையினா் ஈடுபட்டனா். இதனால், இந்தப் பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.

இதேபோல, கொடைக்கானல்-பழனி-வத்தலக்குண்டு-அடுக்கம் ஆகிய மலைச் சாலைகளில் முறிந்து விழும் நிலையில் உள்ள மரங்களை அகற்றுவதற்கு வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments