அணையில் விவசாயி உடல் மீட்பு
பழனி பாலாறு அணை மதகு அருகே விவசாயி உடல் புதன்கிழமை மீட்கப்பட்டது.
பழனி பாலாறு அணை மதகு அருகே விவசாயி உடல் புதன்கிழமை மீட்கப்பட்டது.
பழனியை அடுத்த பாலாறு பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (55). விவசாயியான இவா், பகல் நேரத்தில் ஆடுகளை வளா்த்து வந்தாா்.
இந்த நிலையில், பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து தண்ணீா் வெளியேறும் மதகு அருகே கணேசன் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா். அப்போது, அவா் தனது கையில் காலணிகளைப் பிடித்தவாறு இருந்தாா். தண்ணீரில் தவறி விழுந்து நீச்சல் தெரியாததால் உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பழனி தாலுகா போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.