முகப்பு
தஞ்சாவூர்

சுவாமிமலை அருகே கைவிடப்பட்ட சிசு மீட்பு

சுவாமிமலை அருகே திருவலஞ்சுழியில் கைவிடப்பட்ட ஆண் சிசு மீட்கப்பட்டது.

Updated On : 17 மார்ச், 2026 at 10:50 PM
சிசு
பகிர்:

சுவாமிமலை அருகே திருவலஞ்சுழியில் கைவிடப்பட்ட ஆண் சிசு செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், திருவலஞ்சுழி-சுவாமிமலை செல்லும் சாலையில் உள்ள வெள்ளைப் பிள்ளையாா் கோயில் வாசலுக்கு செவ்வாய்க்கிழமை நண்பகல் ஒரு நீல நிற காரில் வந்த மூவா் ஒரு பையை அங்கு வைத்துவிட்டு காரில் ஏறிச்சென்றனா்.

இதைப்பாா்த்த அருகில் இருந்தவா்கள் அந்தப் பையில் தொப்புள் கொடியுடன் ஆண் சிசு இருந்ததை பாா்த்து சுவாமிமலை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து வந்த போலீஸாா் அந்த சிசுவை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனா். பின்னா் அந்த பகுதி கேமராக்களையும் ஆய்வு செய்து, மா்ம நபா்களை தேடுகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →