சத்தீஸ்கரில் 2 யானைகள் சடலங்களாக மீட்பு!
சத்தீஸ்கரில் இரண்டு யானைகள் சடலங்களாக மீட்கப்பட்டது குறித்து...
சத்தீஸ்கரின் ராய்கர் மாவட்டத்தில் இரண்டு காட்டு யானைகள் புதன்கிழமை (மார்ச் 11) சடலங்களாக மீட்கப்பட்டன.
கார்கோடா வனப்பகுதியில் உள்ள குர்குட் ஆற்றில் இரண்டு யானையின் சடலங்கள் காணப்பட்ட நிலையில், மண்டல வன அதிகாரியின் கீழ் ஒரு குழு அமைக்கப்பட்டு யானைகளின் உடல்கள் மீட்கப்பட்டன என்று வனத்துறை அதிகாரி இன்று தெரிவித்தார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விசாரணைக்கு உதவுவதற்கு ஒரு நாய் மற்றும் மின்சாரத் துறையைச் சேர்ந்த பணியாளர்கள், பறக்கும் படை ஊழியர்கள் ஆகியோர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
மேலும், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே பலிக்கான காரணங்கள் உறுதி செய்யப்படும் என்றும், குளிக்கும்போது அல்லது நதியைக் கடக்கும்போது மூழ்கி பலியாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 26 மாதங்களில் மின்சாரத் தாக்குதல், வேட்டையாடப்படுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 38 யானைகள் மற்றும் 9 புலிகள் பலியாகியுள்ளதாக சத்தீஸ்கர் அரசு சட்டப்பேரவையின் தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Two elephants die in Chhattisgarh.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.