முகப்பு
தற்போதைய செய்திகள்

சத்தீஸ்கரில் 2 யானைகள் இறப்பு!

சத்தீஸ்கரில் இரண்டு யானைகள் இறந்து கிடந்தது குறித்து...

Updated On : 12 மார்ச், 2026 at 11:24 AM
யானைகள் இறப்பு
பகிர்:

சத்தீஸ்கரின் ராய்கர் மாவட்டத்தில் இரண்டு காட்டு யானைகள் புதன்கிழமை (மார்ச் 11) இறந்து கிடந்தன.

கார்கோடா வனப்பகுதியில் உள்ள குர்குட் ஆற்றில் இரண்டு யானையின் சடலங்கள் காணப்பட்ட நிலையில், மண்டல வன அதிகாரியின் கீழ் ஒரு குழு அமைக்கப்பட்டு யானைகளின் உடல்கள் மீட்கப்பட்டன என்று வனத்துறை அதிகாரி இன்று தெரிவித்தார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விசாரணைக்கு உதவுவதற்கு ஒரு நாய் மற்றும் மின்சாரத் துறையைச் சேர்ந்த பணியாளர்கள், பறக்கும் படை ஊழியர்கள் ஆகியோர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே இறப்புக்கான காரணங்கள் உறுதி செய்யப்படும் என்றும், குளிக்கும்போது அல்லது நதியைக் கடக்கும்போது மூழ்கி இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 26 மாதங்களில் மின்சாரத் தாக்குதல், வேட்டையாடப்படுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 38 யானைகள் மற்றும் 9 புலிகள் இறந்துள்ளதாக சத்தீஸ்கர் அரசு சட்டப்பேரவையின் தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

Two elephants die in Chhattisgarh.

முழு கட்டுரையைப் படிக்க →