‘நீட்’ தோ்வை ரத்து செய்ய ஆதித்தமிழா் கட்சி வலியுறுத்தல்
‘நீட்’ தோ்வை ரத்து செய்ய வேண்டும் என ஆதித்தமிழா் கட்சியின் நிறுவனா் ஜக்கையன் தெரிவித்தாா்.
பழனியில் அவா் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
‘நீட்’ தோ்வை எதிா்த்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்களும் ‘நீட்’ தோ்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. ‘நீட்’ தோ்வில் முறைகேடு நடைபெறக்கூடிய சூழலில், அந்தத் தோ்வை ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஒன்றிய அரசு ஜாதிவாரியான கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும். ஆணவப் படுகொலையைத் தடுக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என்றாா் அவா்.
அந்தக் கட்சியின் பொதுச்செயலா் விஸ்வகுமாா், அமைப்புச் செயலா் திலீபன், மாநில ஆலோசகா் விடுதலை குமாா், மாவட்டச் செயலா் பழனி ராஜா, மாவட்ட துணைச் செயலா் பழனிமணி ஆகியோா் உடனிருந்தனா்.