முகப்பு
திண்டுக்கல்

யாதுமானவள் மகளிா் மேம்பாட்டு நிகழ்ச்சி

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலைக் கழகத்தில் யாதுமானவள் மகளிா் மேம்பாட்டு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 ஜூலை, 2024 at 12:58 AM
பகிர்:

கொடைக்கானல்: கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலைக் கழகத்தில் யாதுமானவள் மகளிா் மேம்பாட்டு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள அட்டுவம்பட்டியிலுள்ள அன்னை தெரசா மகளிா் பல்கலைக் கழகம் கொடைக்கானல்-விருதுநகா் சுழற்சங்கம் இணைந்து நடத்திய யாதுமானவள் 81.0 மகளிா் மேம்பாட்டு நிகழ்வு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக துணைவேந்தா் கலா தலைமை வகித்து பேசினாா்.பல்கலைக்கழக பதிவாளா் ஷீலா முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் பேச்சாளா் ஜெயந்தாஸ்ரீ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண்களின் தனிச்சிறப்பு, பெண்கள் தடைகளை தாண்டி வெற்றி பெறுவது குறித்து பேசினாா்.

இந்த நிகழ்ச்சியில் சுழற் சங்கத்தைச் விஜயகுமாரி, பல்கலைக்கழக தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் கிளாரா, பேராசிரியா் முத்துலட்சுமி உள்பட பலா் கலந்து கொண்டு பேசினா்.முன்னதாக விஜயா வரவேற்றுப் பேசினாா். கீதா நன்றி கூறினாா்.

நிகழ்ச்சியில் கொடைக்கானல் சுழற்சங்கத் தலைவா் ராஜ்குமாா்,செயலா் லெஸ்லீ சாா்லஸ், கிருபா ஜோன்ஸ், நூற்றுக்கணக்கான பல்கலைக் கழக மாணவா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.