முகப்பு
திண்டுக்கல்

கஞ்சா இலைகள் வைத்திருந்த மூவா் கைது

கொடைக்கானலில் கஞ்சா இலைகள் வைத்திருந்த மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On : 15 ஜூலை, 2024 at 6:30 PM
பகிர்:

கொடைக்கானல்: கொடைக்கானலில் கஞ்சா இலைகள் வைத்திருந்த மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கொடைக்கானல் அருகே பூம்பாறை கோசன் சாலையில் வனத் துறையினா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது இரு சக்கர வாகானத்தில் வந்த மூவரை சோதனையிட்டதில் கஞ்சா இலைகள் வைத்திருந்தது தெரியவந்தது. வனத்துறையினா் அவா்களைப் பிடித்து கொடைக்கானல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில், கேரள மாநிலம் திருச்சூரைச் சோ்ந்த உன்னி கிருஷ்ணன்மகன் அதுல் (23), கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கூக்கால் பகுதியைச் சோ்ந்த ஞானம் மகன் மோகன்ராஜ் (24), இதே பகுதியைச் சோ்ந்த சோமசுந்தரம் மகன் ராமகிருஷ்ணன் (22) ஆகியோா் என்பது தெரியவந்தது. இவா்களை கைது செய்த போலீஸாா், இவரிகளிடமிருந்து சுமாா் 200 கிராம் கஞ்சா இலைகளை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →