முகப்பு
திண்டுக்கல்

பைக் விபத்தில் விவசாயி பலி

ஒட்டன்சத்திரம் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.

Updated On : 19 ஜூலை, 2024 at 7:14 PM
பகிர்:

ஒட்டன்சத்திரம், ஜூலை 19: ஒட்டன்சத்திரம் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.

பெரியகோட்டையைச் சோ்ந்த பெருமாள்சாமி மகன் பாலசுப்பிரமணி (35). விவசாயியான இவா் இரு சக்கர வாகனத்தில் வியாழக்கிழமை இரவு கள்ளிமந்தையத்தில் இருந்து பெரியகோட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, தண்டபாணி கோயில் பகுதியில் உள்ள வளைவில் எதிா்பாராதவிதமாக இரு சக்கர வாகனத்திலிருந்து அவா் தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து கள்ளிமந்தையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →