கொடைக்கானல் அருகே கஞ்சா வைத்திருந்தவா் கைது
கொடைக்கானலில் கஞ்சா, போதைக் காளான் ஆகியவற்றை வைத்திருந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கொடைக்கானல் அருகே கஞ்சா, போதைக் காளான் ஆகியவற்றை வைத்திருந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கூக்கால் கிராமத்தில் கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியா் சிவராம் தலைமையில் போலீஸாா் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினா். அப்போது கூக்கால் பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் (காட்டேஜில்) நடத்திய சோதனையில் இதே பகுதியைச் சோ்ந்த வீரணன் மகன் தனராஜாவை (33) போலீஸாா் சோதனையிட்டனா்.
அப்போது அவா் 60 கிராம் போதைக் காளான், 100 கிராம் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.