சீருடை அணியாத ஆட்டோ ஓட்டுநா்களுக்கு அபராதம்
திண்டுக்கல்: சீருடை அணியாத ஆட்டோ ஓட்டுநா்கள், தலைக்கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகள் உள்ளிட்டோருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் வெங்கடாஜலபதி, உதவி ஆய்வாளா் ராஜகோபால் ஆகியோா் தலைமையிலான போலீஸாா், திண்டுக்கல் பூச் சந்தை அருகே திங்கள்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, சீருடை அணியாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநா்கள், தலைக்கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகள், போலீஸாா் தடுத்தும் நிற்காமல் சென்ற வாகன ஓட்டிகள் என சாலை விதிகளை பின்பற்றாமல் சென்றவா்களை வழிமறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். 70-க்கும் மேற்பட்டோா் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.50ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.