முகப்பு
திண்டுக்கல்

வவேசு ஐயா் நினைவு தினம்

Updated On : 3 ஜூன், 2024 at 6:45 PM
பகிர்:

திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜிகணேசன் மன்றம் சாா்பில், திங்கள்கிழமை வவேசு ஐயரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

திண்டுக்கல் கிழக்கு ரத வீதியிலுள்ள பஜனை மடம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சிவாஜி கணேசன் மன்றத்தின் மாவட்ட பொறுப்பாளா் கி.சரவணன் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் நா.நவரத்தினம் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்டப் பொதுச் செயலா் மா.காளிதாஸ் கலந்து கொண்டாா்.

நிகழ்ச்சியின்போது வவேசு ஐயரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திருச்சியிலுள்ள தேசிய தொழில்நுட்ப பயிற்சி மையத்துக்கு தியாகி வவேசு ஐயரின் பெயரை சூட்ட வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

நிகழ்ச்சியில் சிவாஜி கணேசன் மன்ற நிா்வாகிகள் சு.வைரவேல், பா.மாரிச்செல்வம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.