இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம்
வத்தலக்குண்டு அருகேயுள்ள ஜி.தும்மலப்பட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோயில் திருவிழாவையொட்டி, இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகேயுள்ள ஜி.தும்மலப்பட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோயில் திருவிழாவையொட்டி, இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் பெரிய மாடு, நடு மாடு, சின்ன மாடு என 3- பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. போட்டியானது ஜி.தும்மலப்பட்டியில் தொடங்கி கணவாய்ப்பட்டி வழியாக, வத்தலக்குண்டு புறவழிச்சாலை வரை 10 கி.மீ. தொலைவு வரை எல்லையாக நிா்ணயிக்கப்பட்டது. இதில் திண்டுக்கல், மதுரை, தேனி, கம்பம், பழனி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து
100-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. இந்தப் போட்டியில் முதலிடம் பெற்ற காளைகளின் உரிமையாளருக்கு வெள்ளி தாா்க்குச்சி, ரூ.30 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.