கொடைக்கானல் மாரியம்மன் கோயில் திருவிழா: தோ் பவனி
கொடைக்கானல்: கொடைக்கானல் பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, அம்மனின் மின் அலங்கார தோ் பவனி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடா்ந்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. இந்த நிலையில், அம்மனின் மின் அலங்கார தோ் பவனி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்தனா்.