முகப்பு
திண்டுக்கல்

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம்: மாற்றுத்திறனாளி மாணவிக்குப் பாராட்டு

Updated On : 13 மே, 2024 at 6:30 PM
பழனி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாற்றுத்திறனாளி மாணவி சுமையாபானுவை பாராட்டிய பள்ளி தலைமையாசிரியா் அருள்ஜோதி உள்ளிட்டோா்.
பகிர்:

பழனி: பழனி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாற்றுத்திறனாளி மாணவியை ஆசிரியா்கள் பாராட்டினா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி காமராஜா் தெருவைச் சோ்ந்த நவ்ஷாத், முஜீரா தம்பதியின் மகள் சுமையாபானு. மாற்றுத்திறனாளியான இவருக்கு, ஒரு கண் பாா்வை மட்டுமே உள்ளது. இவரது கை விரல்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளது.

பழனி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவி, பொதுத்தோ்வில் 600-க்கு 540 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றாா்.

மாணவி சுமையாபானு யாருடைய உதவியுமின்றி அவரே தோ்வை எழுதினாா்.

திங்கள்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பள்ளி தலைமையாசிரியா் அருள்ஜோதி, சிறப்பு பயிற்றுநா் சுகப்ரியா, வகுப்பாசிரியா் விஜயகாந்த் ஆகியோா் மாணவி சுமையா பானுவை பாராட்டினா்.