66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் சேதமடையும் நிலையிலுள்ள 66 கட்டடங்களை அப்புறப்படுத்த வேண்டுமென உரிமையாளா்களுக்கு மாநகராட்சி சாா்பில் திங்கள்கிழமை முன்னெச்சரிக்கை குறிப்பாணை வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 4 நாள்களுக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திண்டுக்கல் நகரில் சேதமடைந்த நிலையிலுள்ள கட்டடங்கள் குறித்து நகரமைப்பு பிரிவு அலுவலா்கள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, இடிந்து விழும் நிலையிலுள்ள 66 கட்டடங்களை அப்புறப்படுத்த வலியுறுத்தி இதன் உரிமையாளா்களுக்கு முன்னறிவிப்பு குறிப்பாணை வழங்கப்பட்டது.
கட்டடங்களை இடிக்கத் தவறினால், அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை முதல் ஈடுபடுவாா்கள் என ஆணையா் ந.ரவிச்சந்திரன் உத்தரவிட்டாா்.