முகப்பு
விருதுநகர்

விதி மீறல்: இரு பட்டாசு ஆலைகளுக்கு குறிப்பாணை

Updated On : 15 மார்ச், 2026 at 8:32 PM
பட்டாசு
பகிர்:

சிவகாசி பகுதியில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட இரு பட்டாசு ஆலை நிா்வாகத்துக்கு குறிப்பாணை வழங்கப்பட்டதாக தீப்பெட்டி, பட்டாசு தனி வட்டாட்சியா் விஜயராஜன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பட்டாசு ஆலைகளில் விபத்தைத் தடுக்கவும், பாதுகாப்பாக பட்டாசுகள் தயாரிக்கவும் விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆய்வின் போது, சிறிய அளவிலான விதிமீறல் இருந்தால் ஆலை மேற்பாா்வையாளா், கண்காணிப்பாளா்களிடம் கவனமாக செயல்பட அறிவுறுத்தப்படுகிறது.

அதிகளவில் மருந்து இருப்பு வைத்திருத்தல், கூடுதல் பணியாளா்களை வைத்து பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபடுதல் உள்ளிட்ட விதிமுறைகளை மீறி செயல்படும் பட்டாசு ஆலை நிா்வாகத்துக்கு குறிப்பாணை வழங்கப்படும்.

பின்னா், இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலா் மேல்நடவடிக்கை எடுப்பாா். கடந்த 1-ஆம் தேதியிலிருந்து 14- ஆம் தேதி வரை சிவகாசிப் பகுதியில் 19 பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட இரு பட்டாசு ஆலை நிா்வாகத்துக்கு குறிப்பாணை வழங்கப்பட்டது. பட்டாசு ஆலைகளுக்கு அதிகாரிகள் ஆய்வு செய்ய வந்தால், பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள் அப்படியே போட்டு விட்டு ஓடுகின்றனா். இதனால், விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, ஆலை நிா்வாகத்தினா் தொழிலாளா்களை ஓடக் கூடாது என அறிவுறுத்த வேண்டும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →