முகப்பு
திண்டுக்கல்

பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா்கள் சோ்க்கை காலம் நீட்டிப்பு

Updated On : 22 மே, 2024 at 12:42 AM
பகிர்:

பழனி: பழனி அருள்மிகு பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா்கள் சோ்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இந்தக் கல்லூரியில் கட்டுமானம், இயந்திரவியல், மின்சாரம் என பல்வேறு படிப்புகள் உள்ளன. இங்கு தமிழக அரசு வழங்கும் அனைத்து சலுகைகளுடன் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டியும் வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டுக்கான மாணவா்கள் சோ்க்கைக்கு மே 20-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் பல்வேறு இயற்கை இடா்பாடுகள் உள்ளிட்ட காரணங்களால் வருகிற 27-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வா் கந்தசாமி தெரிவித்துள்ளாா்.

மேலும் விவரங்களை மாணவ, மாணவிகள் 98941-26126, 99448-80419 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என கல்லூரி நிா்வாகம் தெரிவித்துள்ளது.