முகப்பு
திண்டுக்கல்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்க அளவீட்டு முகாம்

ஒட்டன்சத்திரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உதவி உபகரணங்கள் வழங்க அளவீட்டு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 அக்டோபர், 2024 at 8:11 PM
ஒட்டன்சத்திரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற முகாமில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்ட அலுவலா்.
பகிர்:

ஒட்டன்சத்திரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உதவி உபகரணங்கள் வழங்க அளவீட்டு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் கை, கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உபகரணங்கள் வழங்க அளவு எடுக்கும் பணி நடைபெற்றது. முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சாமிநாதன், ஒட்டன்சத்திரம் சமூக நலத்துறை வட்டாட்சியா் மங்களபாண்டியன், திமுக ஒன்றியச் செயலா்கள் இரா. ஜோதீஸ்வரன்,தி. தா்மராஜன், வட்டார வளா்ச்சி அலுவலா் வடிவேல் முருகன், காமராஜ், வருவாய் ஆய்வாளா்கள் திலகவதி, மஞ்சுளா, நிவேதா, கிராம நிா்வாக அலுவலா் பாபு, உதவியாளா்கள் பாஸ்கரன், பைசல் உள்ளிட்ட சிறப்பாசிரியா்கள் கலந்து கொண்டனா்.