முகப்பு
திண்டுக்கல்

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பொறுப்பேற்பு

திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக ப. உஷா வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

Updated On : 10 அக்டோபர், 2024 at 9:59 PM
ப.உஷா.
பகிர்:

திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக ப. உஷா வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தமிழகம் முழுவதும் 15 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் கடந்த வாரம் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இதன்படி, திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றி வந்த இரா. புண்ணியகோட்டி, திருப்பத்தூா் மாவட்டத்துக்கும், ராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றி வந்த ப. உஷா, திண்டுக்கல் மாவட்டத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இதையடுத்து, திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக ப. உஷா வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இவா், திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலராக கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றியவா் என்பது குறிப்பிடத்தக்கது.