முகப்பு
திண்டுக்கல்

வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம்

வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 17 அக்டோபர், 2024 at 11:23 PM
பகிர்:

வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி பரமேஸ்வரி முருகன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) முனியாண்டி, துணைத் தலைவா் முத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். தீா்மான அறிக்கையை சடையாண்டி வாசித்தாா்.

இதில் மாதாந்திர வரவு, செலவு உள்ளிட்ட 17 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில், உதவிப் பொறியாளா் டெல்லி ராஜா, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் விஜயகா், சக்திவேல், அருவி, ஜீவகன், செல்லம்மாள், பெனினாதேவி, சூசை ரெஜி, தனலட்சுமி, முருகபாரதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, வத்தலகுண்டு வட்டார வளா்ச்சி அலுவலா் (வ.ஊ) உதயகுமாா் வரவேற்றாா். முடிவில், இளநிலை உதவியாளா் நாச்சியப்பன் நன்றி கூறினாா்.