பாலியல் வழக்கில் தொழிலாளிக்கு சிறை
பாலியல் வழக்கில் கூலித் தொழிலாளிக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
பாலியல் வழக்கில் கூலித் தொழிலாளிக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டை அருகேயுள்ள எம்.புதுப்பட்டியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (42). கூலித் தொழிலாளியான இவா், அதே பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் தொந்தரவு அளித்தாா். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், மணிகண்டனுக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1.60 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி பி.வேல்முருகன் தீா்ப்பளித்தாா்.