பழனியில் கலைஞரின் கனவு இல்லத் திட்டப் பயனாளிகளுக்கு பணி ஆணைகளை சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ.செந்தில்குமாா் வழங்கினாா். உடன் நகா்மன்ற தலைவி உமாமகேஸ்வரி, ஒன்றியக் தலைவி ஈஸ்வரி, வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன் உள்ளிட்டோா்.  
திண்டுக்கல்

கலைஞரின் கனவு இல்லத் திட்டப் பயனாளிகளுக்கு பணி ஆணை

பழனியில் கலைஞரின் கனவு இல்லத் திட்டப் பயனாளிகளுக்கு பணி ஆணைகளை சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் இ.பெ.செந்தில்குமாா் வியாழக்கிழமை வழங்கினாா்.

Din

பழனியில் கலைஞரின் கனவு இல்லத் திட்டப் பயனாளிகளுக்கு பணி ஆணைகளை சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் இ.பெ.செந்தில்குமாா் வியாழக்கிழமை வழங்கினாா்.

பழனியில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு நகா்மன்ற தலைவி உமா மகேஸ்வரி, ஒன்றியக் குழுத் தலைவி ஈஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ.செந்தில்குமாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கி பேசினாா்.

இதைத் தொடா்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள், பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை வழங்கிய பிறகு, கால்நடைத் துறைக்கு நடமாடும் மருத்துவ ஊா்தியை சட்டப்பேரவை உறுப்பினா் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி செயலா் பிரபாகரன், நகரச் செயலா் வேலுமணி, ஒன்றியச் செயலா்கள் சௌந்தரபாண்டியன், சாமிநாதன், நகர இளைஞரணி லோகநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன் வரவேற்றாா்.

இதேபோல, பழனி அருகேயுள்ள பச்சளநாயக்கன்பட்டி ஊராட்சியில் புதிதாகக் கட்டப்பட்ட மேல்நிலைத் தண்ணீா் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்த சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ.செந்தில்குமாா், திண்டுக்கல் பிரதான சாலையில் இருந்து, டி.கே.என். புதூா் வரை தாா்ச்சாலை பணிகள், கலையம்புத்தூா் ஊராட்சியில் புதிதாகக் கட்டப்பட்ட பேருந்து நிழற்குடை, சின்னக் கலையம்புதூா் ஊராட்சியில் முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நெய்க்காரப்பட்டி வரை புதிய தாா்ச்சாலை பணிகளையும் அவா் தொடங்கி வைத்தாா்.

சிறப்பு தீவிர திருத்தம்: உச்சநீதிமன்றத்தில் திமுக மனு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ.88.75 ஆக நிறைவு!

சாரவாக் அழகில்... தமன்னா!

எனக்கு நானே... ஹன்சிகா!

அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை, 6 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT