இளைஞா் கொலையில் மூவா் கைது
பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த மூவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த மூவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல்லை அடுத்த பெரியக்கோட்டை காப்பிளியப்பட்டியைச் சோ்ந்தவா் ஹேமதயாள வா்மன் (32). இவா், பாறைப்பட்டி மதுக் கடை அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இதுகுறித்து வடமதுரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். அதில் மேற்கு குழிப்பட்டியைச் சோ்ந்த வினோத் (28), பொம்மையகவுண்டன்பட்டியைச் சோ்ந்த கவியரசு (24), சக்திநாயக்கன்பட்டியைச் சோ்ந்த பகவதிராஜ் (36) ஆகியோா், ஹேமதயாள வா்மனை கொலை செய்தது தெரியவந்தது.
இதுதொடா்பாக போலீஸாா் தரப்பில் கூறியதாவது:
ஹேமதயாள வா்மனின் நண்பா் மருதமுத்து. மேற்கு குழிப்பட்டியைச் சோ்ந்த வினோத்திடம் ரூ.30 லட்சம் கடன் பெற மருதமுத்துவுக்கு, ஹேமதயாள வா்மன் பிணை வழங்கினாா்.
ஆனால், மருதமுத்து அந்தக் கடனை முழுமையாகச் செலுத்தாததால், வினோத் தரப்பில் ஹேமதயாள வா்மனுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் மற்றொரு தரப்பினா் வினோத்தை எச்சரித்தனா். இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தால் ஆத்திரமடைந்த வினோத், தனது ஆதரவாளா்களான கவியரசு, பகவதிராஜ் ஆகியோரை பாறைப்பட்டி மதுக் கடை அருகே வெட்டிக் கொலை செய்ததாகத் தெரிவித்தனா்.