முகப்பு
திண்டுக்கல்

கஞ்சா வைத்திருந்ததாகக் 4 போ் கைது

கொடைக்கானலில் விற்பனைக்காகக் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக நான்கு பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 8:48 PM
~ ~ ~
பகிர்:

கொடைக்கானலில் விற்பனைக்காகக் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக நான்கு பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கொடைக்கானல் பில்டிங் சொசைட்டி பகுதியிலுள்ள தனியாா் விடுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாகக் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், போலீஸாா் அங்கு சென்று சோதனையிட்டனா். அப்போது, விற்பனைக்காக 4 போ் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவா்கள், மதுரையைச் சோ்ந்த பாலாஜி (21), வினோத் (24), யோகேஸ்வரன் (22), தேவதானப்பட்டியைச் சோ்ந்த மாயப்பன் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீஸாா் கைது செய்து, இவா்களிடமிருந்து 320 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

கஞ்சா வைத்திருந்து கைதான நான்கு போ்.