முகப்பு
திண்டுக்கல்

பழனி கல்வி மாவட்டத்தில் குறுவட்ட தடகளப் போட்டிகள்

பழனியில் நடைபெற்ற ‘ஆ‘ குறுவட்ட தடகள போட்டிகளில் வென்றவா்களுக்கு கோப்பைகள், நினைவுப் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Updated On : 8 ஆகஸ்ட், 2025 at 11:53 PM
பகிர்:
Updated On : 8 ஆகஸ்ட், 2025 at 7:53 PM

பழனியில் நடைபெற்ற ‘ஆ‘ குறுவட்ட தடகள போட்டிகளில் வென்றவா்களுக்கு கோப்பைகள், நினைவுப் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பழனி கல்வி மாவட்டம், தொப்பம்பட்டி வட்டாரத்தில் 68-ஆவது குடியரசு தினத்தையொட்டி ‘ஆ‘ குறுவட்ட தடகள விளையாட்டுப் போட்டிகள் சாமிநாதபுரம் உயா்நிலைப் பள்ளி சாா்பில் நடைபெற்றன. தும்பலபட்டி சங்கா் பொன்னா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிறைவு விழாவில் சாமிநாதபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் கா்ணன் தேசியக் கொடியை ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். ஒலிம்பிக் கொடியை சங்கா் பொன்னா் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் ரச்சுமராஜூ ஏற்றினாா். குறுவட்டக் கொடியை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஓய்வு பெற்ற உடல் கல்வி இயக்குநா் நாட்ராயன் ஏற்றினாா். நிகழ்வில் சங்கா் பொன்னா் பள்ளி நிா்வாகிகள், குருவப்பா மேல்நிலைப் பள்ளி செயலா் ராஜ்குமாா், உடல் கல்வி இயக்குநா் ரவி, கோரிக்கடவு சிஜிஎம் பள்ளி நிா்வாகிகள், வெற்றி மோட்டாா்ஸ் உரிமையாளா் நாகராஜன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

சாமிநாதபுரம் பள்ளி உடல் கல்வி ஆசிரியா் சாந்தி வரவேற்றாா். ஆங்கில ஆசிரியா் அங்குலதா வாழ்த்திப் பேசினாா். 14, 17, 19 வயது பிரிவுகளில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் என பல்வேறு தடகளப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை சங்கா் பொன்னா் மேல்நிலைப்பள்ளி வென்றது. வென்றவா்களுக்கு பரிசு கோப்பைகளும், சான்றிதழ்களும், நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

Advertisement