திண்டுக்கல்

திண்டுக்கல் மலைக்கோட்டையில் தீபம் ஏற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மலைக்கோட்டை மேல் காா்த்திகை தீபம் ஏற்றக் கோரி, இந்து மக்கள் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் தலைமை அஞ்சல் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தொண்டா் அணித் தலைவா் மோகன் தலைமை வகித்தாா். மாவட்ட தொண்டரணி தலைவா் மணிகண்டன், முழு நேர ஊழியா் ராமசந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத் தலைவா் ஐயப்பன், பொதுச் செயலா் அண்ணாதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, திண்டுக்கல் மலைக்கோட்டையிலுள்ள கோயிலில் மீண்டும் அபிராமி அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்ய வேண்டும். காா்த்திகையை முன்னிட்டு, மலைக்கோட்டை மேல் தீபம் ஏற்ற வேண்டும். இதற்கான முயற்சியில் ஈடுபட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் முழக்கமிட்டனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT