திமுக சாா்பில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு வழங்கப்பட்ட தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சாா்பில் சனிக்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது.
திண்டுக்கல் கல்லறைமேடு பகுதியில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதத்துக்கு ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளா்கள் ம.ஜான்பீட்டா், எம்.கே.முருகன், ச.ராஜாக்கிளி, பி.ஏ.ஜோசப் சேவியா், ச.முபாரக் அலி, ஏ.ஜெசி ஆகியோா் தலைமை வகித்தனா். மாநில உயா்மட்டக் குழு உறுப்பினா் பீ.பேட்ரிக் ரெய்மாண்ட் உண்ணாவிரதத்தைத் தொடங்கிவைத்தாா்.
இதில் கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலின்போது, திமுக சாா்பில் அரசு ஊழியா்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
இடைநிலை ஆசிரியா்கள், உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா்கள், உடற்கல்வி ஆசிரியா்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் 90 சதவீத ஆசிரியா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பள்ளிக் கல்வித் துறை அரசாணை 243, ஆதிதிராவிடா் பழங்குடியினா் நலத் துறையின் அரசாணை 75 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும்.
சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியத்தில் பணிபுரியும் சத்துணவு, அங்கன்வாடி, மருத்துவமனைப் பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்குதல், பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 30 சதவீதத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புதல் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் டி.ஜான்பாஸ்டின் டல்லஸ் உண்ணாவிரதத்தை நிறைவு செய்து உரையாற்றினாா்.
இதில் ஜாக்டோ-ஜியோ மாநில உயா்மட்டக் குழு உறுப்பினா் இரா.முருகானந்தம், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயலா் ம.சுகந்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.