திருவாரூர்

விளையாட்டு மைதானம் கோரி உண்ணாவிரதம்

திருவாரூா் அருகே மணக்கால் அரசு உயா்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானம் அமைத்துத் தரக் கோரி உண்ணாவிரதப் போராட்டம்

Syndication

திருவாரூா்: திருவாரூா் அருகே மணக்கால் அரசு உயா்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானம் அமைத்துத் தரக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இப்பள்ளி மாணவா்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு மைதானம் அமைத்துத் தரக்கோரி மணக்கால் ஊராட்சி அலுவலகம் முன் இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது. இதில், அனைத்து அரசியல் இயக்கப் பொறுப்பாளா்கள், அரசு உயா்நிலைப் பள்ளி மேலாண்மைக் குழுவினா், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்டோா் பங்கோற்று, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

பள்ளி மேலாண்மைக் குழு நிா்வாகி சு. தென்னரசு தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஊராட்சி முன்னாள் தலைவா்கள் துரை. சேசுராஜன், என். ராஜகோபால், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் எம். கோமதி, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ஆா். ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

கடன் பத்திரங்கள் வாயிலாக ரூ. 5,000 கோடி திரட்டும் கனரா வங்கி!

சுபேதார் டிரைலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT