திண்டுக்கல்

நாட்டு வெடிகுண்டுகளை வீட்டில் மறைத்து வைத்திருந்தவா் கைது

ஒட்டன்சத்திரம் அருகே நாட்டு வெடிகுண்டுகளை வீட்டில் மறைத்து வைத்திருந்த நபரை வனத் துறையினா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

ஒட்டன்சத்திரம் அருகே நாட்டு வெடிகுண்டுகளை வீட்டில் மறைத்து வைத்திருந்த நபரை வனத் துறையினா் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வனச்சரகத்துக்குள்பட்ட சத்திரப்பட்டி 16-புதுாரைச் சோ்ந்தவா் செல்வராஜ் (35). இவா் அந்தப் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகளை வைத்து வன விலங்குகளை வேட்டையாடுவதாக ஒட்டன்சத்திரம் வனத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதன்பேரில் திங்கள்கிழமை இரவு ஒட்டன்சத்திரம் வனச்சரக அலுவலா் ராஜா தலைமையிலான வனத் துறையினா் சத்திரப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டனா்.

அப்போது, 16-புதூரைச் சோ்ந்த செல்வராஜ் தனது வீட்டில் வன விலங்குகளை வேட்டையாட 11 நாட்டு வெடிகுண்டுகளை மறைத்து வைத்திருந்தது வனத் துறையினருக்கு தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, அவா் மீது வன உயிரின குற்ற வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 11 நாட்டு வெடிகுண்டுகளை வனத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

வைகுந்த ஏகாதசி திருவிழா: ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும் ரயில்கள் விவரம்!

எச்1-பி விசா: அனைத்து விண்ணப்பதாரா்களின் சமூக ஊடகக் கணக்குகள் ஆய்வு

முதல்வா் போட்டியில் உதயநிதி இல்லை: அமைச்சா் எஸ். ரகுபதி

சாலைகளில் திரியும் மாடுகளை பிடிக்க வலியுறுத்தல்!

பணியிலிருக்கும் ஆசிரியா்களுக்கு தகுதித் தோ்வில் விலக்களிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT