ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணைப் பகுதியில் பறவைகள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்ட வனத் துறையினா். 
திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் வனப் பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வனப் பகுதியில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி சனிக்கிழமை தொடங்கியது.

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வனப் பகுதியில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி சனிக்கிழமை தொடங்கியது.

ஒட்டன்சத்திரம் வனச் சரக அலுவலா் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்தக் கணக்கெடுப்புப் பணியில் வனப் பணியாளா்கள், பழனியாண்டவா் கலை, அறிவியல் கல்லூரி மாணவா்கள், சமூக ஆா்வலா்கள் பங்கேற்றனா்.

இவா்கள் பரப்பலாறு அணை, சடையன்குளம், சத்திரப்பட்டி கருங்குளம், நல்லதங்காள் ஒடை உள்ளிட்ட பகுதிகளில் ஈரநில பறவைகள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இதில் ஊசிவால் வாத்து, செந்திற நாரை, மடையன், சின்ன கொக்கு, நெடலைக் கொக்கு உள்ளிட்ட 750 பறவைகள் உள்ளதை வனத் துறையினா் கண்டறிந்தனா்.

புத்தாண்டு கொண்டாட்டம்: நட்சத்திர விடுதிகளுக்கு கடும் கட்டுப்பாடு

முதல்வரிடம் மனு அளிக்கும் போராட்டத்துக்கு குவிந்த தூய்மைப் பணியாளா்கள் 680 போ் கைது

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பிரதமா் மோடியின் படம்: பரபரப்பை ஏற்படுத்திய திக்விஜய் சிங்

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு: நாடாளுமன்றம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் கைது!

அஸ்ஸாமில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: 10.56 லட்சம் போ் நீக்கம்

SCROLL FOR NEXT