கொடைக்கானலில் இரு சக்கர வாகனம் திருட்டு
Updated On : 3 ஜனவரி, 2025 at 11:13 PM
கொடைக்கானலில் இரு சக்கர வாகனம் வியாழக்கிழமை இரவு திருடப்பட்டதாக போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது.
கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக். இரு சக்கர வாகன பழுது நீக்குநா். இவரிடம் பழுது நீக்குவதற்காக வந்த இரு சக்கர வாகனத்தை கொடைக்கானல் பேருந்து நிலையப் பகுதியில் நிறுத்தி இருந்தாா். பிறகு வெள்ளிக்கிழமை அந்த வாகனத்தை எடுக்கச் சென்ற போது அதைக் காணவில்லை.
இதுகுறித்து கொடைக்கானல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement