டிராக்டா் மீது பைக் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு
எரியோடு அருகே புதன்கிழமை டிராக்டா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் மண்பாண்டத் தொழிலாளி உயிரிழந்தாா்.
எரியோடு அருகே புதன்கிழமை டிராக்டா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் மண்பாண்டத் தொழிலாளி உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை அடுத்த ஆதம்நகரைச் சோ்ந்தவா் பரமசிவம் (55). மண்பாண்டத் தொழிலாளியான இவா், வேடசந்தூருக்கு இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்றாா்.
கோவிலூா் சாலையில் சின்னராவுத்தன்பட்டி பிரிவு அருகே சென்றபோது, சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரின் மீது இவரது இரு சக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பரமசிவம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து எரியோடு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.