முகப்பு
திண்டுக்கல்

பைக் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

Updated On : 27 ஏப்ரல், 2026 at 12:27 AM
கோப்புப் படம்
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

வேடசந்தூரை அடுத்த சாரளப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜா (27). இவா் ரெங்கநாதபுரம் அருகேயுள்ள தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், பெட்ரோல் விற்பனை நிலையத்திலிருந்து வேடசந்தூருக்கு தனது இரு சக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை சென்றாா்.

Advertisement

கரூா்-திண்டுக்கல் 4 வழிச்சாலையில், விருதலைப்பட்டி அருகே வந்தபோது, கரூரிலிருந்து திண்டுக்கல்லுக்கு வந்த காா் இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் ராஜா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து கூம்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.